Sunday, August 17, 2008

சரித்திரத்தில் நிலைபெற்ற இஸ்ரேல்!

உலக நாடுகளில் இஸ்ரேல் நாடு இரண்டு உலகப் போர்களின் வரலாற்றில் இடம்பெற்ற நாடாக விளங்குகிறது. யூதர்கள் வாழ்கின்ற நாடு. உலகம் போற்றும் ஏசுநாதர் பிறந்த பூமி. ஹீப்ரு மொழி பேசும் நாடு. கிறிஸ்தவ சமுதாயத்தின் வழிபாட்டுக்குரிய ஜெருசலேம் அமைந்துள்ள நாடு. இன்று யூதர்கள், இஸ்லாமியர்கள் போராட்டக் களமாகத் தொடர்கின்ற நாடாக அமைந்துவிட்டது.
இந்த நாட்டில் யூதர்கள் குடியேறினார்கள். இஸ்லாமியர்களை வெளியேற்றுகிறார்கள் என்று ஒரு தரப்பில் போர் முழக்கம் செய்யப்படுகிறது. இஸ்ரேல் நாடும், பாலஸ்தீன நாடும் சுதந்திரமாக அந்த மண்ணில் மலர்ந்திட வேண்டும் என்றும் நல்லவர்கள் கூறுகிறார்கள்.
இஸ்லாமிய நாடாகிய ஈரான் நாட்டில் வசிக்கும் பெண் எழுத்தாளர் வழக்கறிஞர் முனைவர் ஷிரின் எபாடி ஈழ். நட்ண்ழ்ண்ய் உக்ஷஹக்ண் நோபல் பரிசு பெற்றவர். அவருடைய நூல் 23 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. அவர் நடுநிலையோடு பேசுகிறார். ஙண்க்க்ப்ங் உஹள்ற் பகுதி நாடுகளில் இஸ்லாமியர்களும், யூதர்களும் பண்டைக் காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக அமைதியுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கிடையே எழுந்துள்ள பிரச்னை சுமுகமாகத் தீர்ந்து விடும். அவர்களுக்கிடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கிடையே இறுதியில் சமாதானமாக முடியும் என்று அந்த உலகம் போற்றும் எழுத்தாளர் கூறியுள்ளார்.
ஏசுகிறிஸ்துவைக் கொன்றவர்கள் யூதர்கள் என்ற வெறுப்புணர்வு உலக நாடுகளில் வளர்ந்தது. பண்டைக்காலத்து யூதர்கள் அரசு, ரோமானிய சாம்ராஜ்யத்தால் போரில் அழிக்கப்பட்டது. பிற்காலத்தில் நெப்போலியன் போனபார்ட்டின் உதவியால் யூதர்கள் மறுவாழ்வு பெற்றனர்.
மீண்டும் முதல் உலகப் போரில் 1920ஆம் ஆண்டு பிரிட்டன் தலைமையில் இர்ம்ம்ர்ய்ஜ்ங்ஹப்ற்ட் நாடுகளின் படை, பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியது.
இரண்டாவது உலகப் போர் முடியும்வரை பல நிகழ்ச்சிகள் யூதர்களையும், பாலஸ்தீன மக்களையும் பகை உணர்ச்சியோடு போராட வைத்தன. அதிகமான யூதர்கள் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியேறி வாழ்க்கையைத் தொடங்கினர்.
பாலஸ்தீனர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்ற அனைவரும் சமத்துவத்துடன் வாழ்ந்திட சட்டங்கள், திட்டங்கள் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியினர் முயற்சித்தனர். ஆங்கிலம், அரபிக், ஹீப்ரு ஆகிய மூன்று மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்கினர். 1926ஆம் ஆண்டு நகராட்சிகள் சட்டத்தின் மூலம் அந்தந்த சமுதாய மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் உள்ளாட்சி மூலம் சுதந்திரமாகச் செயல்படவும் அனுமதிக்கப்பட்டது. இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் மதவேறுபாட்டு உணர்ச்சிகள் மறையவில்லை. மக்கள்தொகையில் இருந்த ஏற்றத்தாழ்வு பாலஸ்தீனம் ஒரு நாடு என்ற கொள்கைக்கு வெற்றியைத் தரவில்லை.
1922ஆம் ஆண்டு எடுத்த மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் 78 சதவிகிதம் இஸ்லாமியர்கள், 11 சதவிகிதம் யூத இன மக்கள், 9.6 சதவிகிதம் கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். வெளிநாடுகளில் குடிபெயர்ந்த யூதர்கள் திரும்பி வரத் தொடங்கினர். 1945ஆம் ஆண்டில் யூதர்கள் 31 சதவிகிதம் என்று மக்கள்தொகை பெருகின.
பிரிட்டன் ஆட்சிக்கு எதிராக அரேபிய நாடுகளில் போராட்டங்கள் தொடங்கின. யூதர்களின் தனிநாடு கோரிக்கையை அரேபிய நாடுகள் எதிர்த்தன. ஜெர்மன் நாட்டு ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி தோன்றிய காலகட்டம். ஹிட்லரும், முசோலினியும் கூட்டாக அரேபிய நாடுகளின் சுதந்திரத்திற்கு ஆதரவு கொடுத்தனர். பாலஸ்தீனத்தில் தோன்றிய யூதர்களின் சுதந்திரம் அழிக்கப்படும் என்று ஹிட்லரின் கூட்டணி அரசுகள் உறுதி அளித்தன. ஜெர்மன் நாட்டில் குடியேறியிருந்த யூத இன மக்கள், ஹிட்லர் ஆட்சியில் அழிக்கப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் 28.4.1947இல் உலக நாடுகளின் சபையாகிய ஐக்கிய நாடுகளின் சபை பாலஸ்தீனம் இஸ்ரேல் பிரச்னை பற்றி விவாதித்தது. இந்தப் பிரச்னை பற்றி விசாரித்து பரிந்துரை வழங்கிட 13.5.1947இல் ஐ.நா. சபையின் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இந்தியப் பிரதிநிதியும் இடம்பெற்றிருந்தார். இக்குழுவின் பெரும்பான்மையான நாடுகள் பாலஸ்தீன நாட்டைப் பிரித்து யூதர்கள் விரும்பும் இஸ்ரேல் என்றும், அரேபியர்களுக்கு பாலஸ்தீனம் என்றும் இரு நாடுகளாகப் பிரிவினை செய்து அங்கீகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தன. சில நிபந்தனைகளையும் விதித்தன. இந்தியா உள்பட சில நாடுகளின் பிரதிநிதிகள் இரு இன மக்களும் வாழும் இரு மாநிலங்களின் கூட்டாட்சி அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.
ஜெருசலேம் மத்திய அரசுக்குத் தலைநகர் என்றும், இரு மாநிலங்களும் மாநிலங்களுக்குள்ளே உள்ள பிரச்னைகளை நிர்வகிக்கும் அதிகாரம் பெறும் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை அதிகாரங்கள் மத்திய அரசுக்குத் தரப்படும் என்றும் பரிந்துரைகள் செய்தன. யூதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறுவதற்கு சில கட்டுப்பாடுகளையும் இந்தியாவோடு இணைந்த நாடுகளின் பிரதிநிதிகள் நிபந்தனையாகக் கூறினர்.
இந்தியாவோடு சில நாடுகளும் சேர்ந்து கூறிய யோசனைகளை இரு பிரிவினரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிவினைக் கொள்கையை யூதர்கள் ஏற்றனர். அரேபியர்கள் எதிர்த்தனர். அரேபிய நாடுகள் இரு யோசனைகளையும் எதிர்த்து போர் மூளும் என்று எச்சரித்தனர்.
ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் குழு இந்தப் பிரச்னையைப் பரிசீலிக்கும் என்று முடிவெடுத்து அறிவித்தது. கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன. சோவியத் யூனியன் பிரதிநிதி ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டத்தில் 1947ஆம் ஆண்டு பேசும்போது, ""யூதர்களுக்கென்று தனிநாடு அமைய வேண்டும்'' என்று வாதிட்டார். அரேபியர்கள் யூதர்கள் இணைந்து ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்வதால் பிரிவினை செய்வதுதான் சரியான தீர்வாகும் என்று பேசினார். 13.10.1947ஆம் நாள் பெரும்பான்மை நாடுகள் விரும்பிய அரேபியர், யூதர்கள் தனிநாடு பிரியும் விருப்பத்தை சோவியத் யூனியன் ஆதரிப்பதாக அந்நாட்டின் பிரதிநிதி பேசினார். ட்ரூமன் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த நேரம். ஒருபக்கம் அரேபிய நாடுகளில் உள்ள பெட்ரோல் தேவை. மறுபக்கம் பணச் செல்வாக்குள்ள அமெரிக்காவில் வாழ்ந்த யூதர்களின் செல்வாக்கு. இறுதியில் 1947ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் ஐ.நா. சபை அமைத்த பாலஸ்தீனக் குழுவினர் நாட்டைப் பிரிவினை செய்ய வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் முடிவு எடுத்துள்ளனர். 4,500 சதுர மைல் பரப்பும் அதில் வாழ்ந்த 8,04,000 அரேபியர்களும் 10,000 யூதர்களும் கொண்ட பகுதி அரேபியரின் பாலஸ்தீன நாடாக முடிவு செய்தார்கள். 5,500 சதுர மைல் பரப்பில் வாழ்ந்த 5,38,000 யூதர்கள், 3,97,000 அரேபியர்கள் வாழ்ந்த பகுதியை யூதர்கள் நாடாக உருவாக்கிவிட வேண்டும் என்ற பெரும்பான்மை குழுவினர்கள் முடிவு எடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தப் பிரிவினையை அகில உலக நாடுகளின் குழு கண்காணிக்க முடிவு எடுக்கப்பட்டது.
1947 நவம்பர் 29ஆம் நாள் மேற்கண்ட பிரிவினைத் திட்டம் ஐ.நா. சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அமெரிக்காவும், சோவியத் ரஷியாவும் இந்தத் திட்டத்தை ஆதரித்தன. இந்தியா உள்பட சில நாடுகள் இத்திட்டத்தை எதிர்த்தன. இந்தத் திட்டம் ஒரு தீர்மானமாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு உலக நாடுகள் இந்தப் பிரிவினைத் திட்டத்தை ஆதரித்தன. யூதர்களும் அரேபியர்களும் இணைந்து வாழும் கூட்டாட்சி முறை அமைந்திட வேண்டும் என்ற திட்டத்தை இருசாராரும் ஏற்கவில்லை.
ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படி இஸ்ரேல் நாடு சுதந்திர நாடாகப் பரிணமித்தது. அமெரிக்கா, சோவியத் ரஷியா உள்பட உலக நாடுகள் இஸ்ரேல் நாட்டுக்கு அங்கீகாரம் அளித்தன. 1920ஆம் ஆண்டு முதல் உலகப் போரில் தொடங்கிய பிரிட்டிஷ் ஆட்சி, முடிவுக்கு வந்தது. அரேபிய நாடுகள் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவில்லை. அரேபிய நாடுகளும், அரேபியா பகுதி என்று பிரிவினை செய்யப்பட்ட பாலஸ்தீனம் பகுதியில் வாழ்ந்த அரேபியர்களும் இஸ்ரேல் பகுதி மீது 1948ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தாக்குதலைத் தொடங்கினார்கள். பாலஸ்தீன அரேபியர்கள் இஸ்ரேல் மீது கொண்ட பகை பல்லாண்டுகள் தொடர்ந்தன. உலக சபையால் அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவு நாடுகள் அதிகரித்தன. எகிப்து போன்ற அரேபிய நாடும் இரு நாடுகளும் சுதந்திரமாக நட்பு நாடுகளாக தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆதரவு தரத் தொடங்கின. பல்வேறு போர்களுக்குப் பிறகு பாலஸ்தீன அரேபியர் பகுதி நாடு சுதந்திர நாடாகத் தோன்றியது. ஆனால் இன்றும் எல்லைகளை வரையறுக்கும் பிரச்னை பற்றிப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
இஸ்ரேல் நாட்டுப் பகுதி யூதர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பகுதி என்பது உண்மை. அந்தப் பகுதியில் அரேபியர்களின் எண்ணிக்கை பெருகியதும், யூதர்கள் பல போர்களில் கொல்லப்பட்டதும், நாட்டிலிருந்து விரட்டப்பட்டதும் சரித்திர நிகழ்ச்சிகள். இன்று நடைபெறும் எல்லைப் பிரச்னைகளும் சுமுகமாகத் தீர்ந்து இரு நாடுகளும் சுதந்திரமாக நட்பு நாடுகளாக வாழும் சரித்திரம் தோன்ற வேண்டும்.
இந்திய நாடு உலக சபையில் 1947இல் ஆதரித்த பாலஸ்தீனம் இஸ்ரேல் பகுதிகள் இணைந்து கூட்டாட்சி முறை அமைய வேண்டும் என்ற திட்டம் ஏற்கப்பட்டிருந்தால் போர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
5 லட்சம் மக்கள்தொகையில் உருவான இஸ்ரேல் நாடு, கடின உழைப்பாலும், அறிவியல் நுட்பங்களின் வளர்ச்சியாலும், பொதுத் துறைகள் மூலம் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டு பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளோடு போட்டியிடும் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது.
அறிவு நுட்ப வளர்ச்சியின் மூலமும் ராணுவ பலத்திலும் உலக வல்லரசு நாடுகளோடு இணைந்து செயல்படும் வலிமையோடு வளர்ந்திருக்கும் இஸ்ரேல் நாட்டின் வளர்ச்சி உலக சரித்திரத்தில் நிலையான இடம் பெற்றுவிட்டது.
செ. மாதவன்
நன்றி : தினமணி