Thursday, August 28, 2008

வெப்பம் குறைய மூன்று வழிகள்

பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகத்துக் கொண்டே வருகிறது. அண்மையில் ஜப்பானில் கூடிய ஜி8 மாநாட்டின்போது, இதுபற்றி ஓர் அறிக்கையை உலக நாடுகளில் உள்ள 12 சிறந்த விஞ்ஞானிகள் வெளியிட்டனர். அதன்படி, 20 ஆண்டுகளில் பூமியின் வெப்பம் 0.2 முதல் 0.4 சென்டிகிரேடு என்ற அளவில் அதிகக்கப் போகிறது என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். பூமி வெப்பம் உயர்ந்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் தொடர்ந்து உருகத் தொடங்கிவிடும். அவ்வாறு உருகினால் கடல்நீர் அளவு உயர்ந்து கடற்கரையை ஒட்டியுள்ள நகரங்கள் மெல்ல மெல்ல மூழ்கிவிடும் அபாயம் உள்ளதாகக் கணித்துள்ளார்கள். இதுகுறித்து பேசுவதற்குத்தான் டோக்கியோவில் ஜி8 நாடுகளின் உச்சி மாநாடு சென்ற ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் ஜி8 நாடுகள் மட்டுமல்லாமல் சீனா, இந்தியா, தென்னாப்பிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகிய ஐந்து நாடுகளும் பங்கு பெற்றன. இந்த ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் வெப்பநிலை குறித்த ஒரு வரைவு அறிக்கையைத் தயாப்பதில் கூட்டாக ஈடுபட்டனர். இந்த உச்சி மாநாட்டில் ஜி8 நாடுகள் அல்லாமல் இதில் பங்குபெற்ற அந்த ஐந்து நாடுகளும் பூமி வெப்பத்திற்குக் காரணமான 37 தொழில்வள நாடுகளில் முதல் ஐந்து நாடுகளாகும். பூமி வெப்பம் அதிகக்கக் காரணமாக இருந்து வருகிற நாடுகளில் முதல் நாடு அமெக்கா. அது ஜி8 நாடுகளில் ஒன்று. இரண்டாவது நாடு சீனா. இது மற்ற 5 நாடுகளில் ஒன்று. எதிர்காலத்தில் சீனாவும், இந்தியாவும்தான் க மாசுவை அதிக அளவில் வெளியிடும் நாடுகளாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்தியாவில் ஆண்டுக்கு நபர் ஒருவர் 1.2 டன் க மாசுவையும், அமெக்காவில் நபர் ஒருவர் 20 டன் க மாசுவையும் வெளியிடுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தொழில்வள நாடுகள் தங்கள் தொழிற்சாலைகளிலிருந்து மாசைப் புகையாக, தூசியாக, வெப்பமாக, சப்தமாகத் தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. இதனால் பூமிக்கு மேலே வியாபித்துக் கிடக்கிற 5 கி.மீ. உயரத்திற்குக் காற்று மண்டலம் நச்சுப்படுத்தப்பட்டு வருகிறது. இது பூமியின் தட்பவெப்ப நிலைகளுக்குக் கேடு விளைவிக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த 12 விஞ்ஞானிகளும் உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இந்தக் கேடுகளை எந்தெந்த வகையில் எல்லாம் குறைக்க முடியுமோ, அதைச் செய்வதற்கு முன்வரும்படி உலக நாடுகளை அவ்விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ரஷிய விஞ்ஞானி யூ இஸ்ரேல் என்பவர்தான் இந்தக் கூட்டறிக்கையைத் தயாத்ததில் பெரும் பங்காற்றியவர். நம்முடைய பூமிப் பரப்பில் பரவியுள்ள க மாசு நச்சுத்தன்மை உடையது. இதை எப்படிக் குறைப்பது என்பதற்கு ஜப்பான் நாடு ஒரு புதிய ""உற்பத்திஉத்தி'' ஒன்றைக் கையாண்டுள்ளது. அதைப் பின்பற்றினால் 2050க்குள் சுற்றுச்சூழலில் படிந்துள்ள நச்சுத்தன்மையுள்ள க மாசை 70 சதவீதம் அளவுக்குப் படிப்படியாகக் குறைத்துவிடலாம் என்கிறார்கள் ஒரு பிவினர். இந்த உற்பத்திஉத்தி உலகத்திலுள்ள ராட்சதத் தொழிற்சாலைகள் அனைத்திலும் கையாளப்பட்டாலும், நச்சுத்தன்மையுள்ள க மாசைக் குறைப்பது சிரமமே என்கிறார்கள் இன்னொரு பிவினர். ஆகவே, பூமி வெப்பத்தைக் குறைப்பதற்கு வேறு சில உத்திகளைக் கையாள வேண்டியவர்களாக நாம் உள்ளோம். அவற்றில் ஒன்று நிலப் பொறியியல் தொழில்நுட்பம். பூமியின் மேல் விழுகிற சூய வெப்பத்தின் ஒரு பகுதியை பூமி உள்வாங்கிக் கொள்கிறது. இன்னொரு பகுதியை பூமி பிரதிபலித்து வெளிவிடுகிறது. பூமியின் மேலுள்ள மரங்கள்தான் இந்த வெப்பத்தின் ஒரு பகுதியைத் தன்மயப்படுத்திக் கொண்டு மறுபகுதியைப் பிரதிபலித்து வெளிவிடுகின்றது. இந்தப் பிரதிபலிப்புத் திறன் மரத்தின் வயதுக்கேற்ப வேறுபடுகிறது. இளமையான மரங்கள் இந்தக் க மாசைத் தனது வளர்ச்சிக்குத் தேவையான அளவுக்கு எடுத்துக் கொள்கிறது. அதேசமயம், வயதான மரங்கள் இதே க மாசை அந்த அளவுக்கு எடுத்துக் கொள்வதில்லை. இந்த உண்மையை விஞ்ஞானிகள் இப்போதுதான் கண்டறிந்து தெவித்துள்ளனர். இதன் மூலம், க மாசை அதிகம் உள்கொண்டு பிராணவாயுவை அதிகமாக வெளியிடுபவை, வளர்ந்து வருகிற இளமையான மரங்கள்தான். வயதான மரங்கள் தமது முதுமை காரணமாக இந்தப் பணியைச் செய்வதிலிருந்து ஓய்வு பெற்று விடுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். மரக்கன்றுகளைப் புதிது புதிதாக நட்டு வனவளத்தைத் தொடர்ந்து அதிகப்படுத்தி வருவோமானால், நமக்குத் தேவையான பிராண வாயுவை மரங்கள் கொடுக்கும். நமது கயமில வாயுவை மரங்கள் வாங்கிக் கொள்ளும். இதைச் சுறுசுறுப்பாகச் செய்து பூமியின் சுற்றுச்சூழலைச் சுத்திகக்கின்ற பணியை எல்லா மரங்களுமே செய்வதாகவே இதுவரை நாம் எண்ணி வந்தோம். அப்படி இல்லை. பூமியின் தட்பவெப்பநிலையைச் சமநிலையில் பராமக்க வேண்டுமானால், வனங்களில் உள்ள வயதான மரங்களைத் தொடர்ந்து அப்புறப்படுத்தவும் வேண்டும்; புதிய மரக் கன்றுகளை நட்டு வளர்க்கவும் வேண்டும். பூமியில் க மாசு என்ற கார்பன் டை ஆக்ஸைடு உருவாவதற்குக் காரணம், நமது தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுகள்தான். பூமியில் காட்டு வளம் 33 சதவீதம் இருந்தால்தான் தட்பவெப்பச் சமநிலை பராமக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இப்போது 12 சதவிகிதம் வரைதான் காட்டுவளம் இருப்பதால் பூமியில் அதிகத்துள்ள க மாசுவைக் குறைக்க முடியாமல் போகிறது. அதனால்தான் மேலும் மேலும் பூமியின் வெப்பம் அதிகத்து வருகிறது. க மாசை உள்கொண்டு பூமியின் வெப்பத்தை மரங்கள் குறைப்பதைப் போலவே கடல்பாசிகளும் இந்தக் க மாசுவை உள்கொண்டு வெப்பத்தைக் குறைக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மரக் கன்றுகளை நடுவதைப் போல கடல்பாசிகளை அதிகப்பதற்கும் உய நடவடிக்கையை எடுத்தால், காட்டு மரங்கள் செய்கிற அதே பணியைக் கடல்பாசிகளும் செய்து பூமியின் வெப்பத்தைக் குறைக்க உதவும். பூமியில் கூடுதலாக ஏற்படும் க மாசுவைக் கூட, கடலிலேயே சேமித்து வைத்துக் கொள்ள முடியுமாம். இந்த இரண்டு வழிகளும் அல்லாமல், சூய வெப்பம் பூமியைத் தாக்காமல் இருக்க மேலும் ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேல் ஆகாயத்தில் விக்க ஒரு ரசாயனப் போர்வையை ரஷிய விஞ்ஞானிகள் இப்போது உருவாக்கியுள்ளனர். கந்தக அமிலக் கரைசலை சில ரசாயனப் பொருள்களோடு கலந்து, பூமிக்கு மேல் 12 16 கி.மீ. உயரத்திற்குச் சென்று விமானம் மூலம் பரவலாகத் தெளித்துவிடும் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு செய்தால், பூமிக்கு வரும் சூயக் கதிர்களின் வெப்பத்தை அது பாதியாகக் குறைத்து விடுகிறது. அவ்வாறு குறையுமானால், பூமியின் வெப்பநிலையும் குறைந்து விடுகிறது. இவ்வாறு, இளமையான காட்டு மரங்களின் மூலமாகவும், அதிகமான கடல்பாசிகளின் மூலமாகவும், கந்தகக் கரைசல் போர்வை மூலமாகவும் பூமியின் வெப்பத்தைச் சில "டிகிகள்' குறைக்க முடியும். இந்த கந்தக அமிலக் கரைசலைத் தெளித்து, பூமியின் வெப்பத்தைக் குறைக்கலாம் என்பதை, ஒரு தற்செயலான நிகழ்வால்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொதிக்கும் குழம்பை எமலை வெளியே கக்குகிற போது, அந்தக் குழம்பில் உள்ள கந்தக அமிலம் ஆகாயப் பரப்பில் வீசப்படுகிறது. அதன் காரணமாக, அந்த எமலைப் பிரதேசத்தில் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது. இதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் அதே கந்தக அமிலக் கரைசலைத் தயாத்து விமானங்களில் எடுத்துச் சென்று ஆகாயத்தில் தெளித்து, சூய வெப்பத்தைக் குறைத்துவிடலாம் என்று சோதனை செய்து அதில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தச் சோதனையை ரஷியாவிலுள்ள சில பகுதிகளில் தற்போது செய்து பார்த்து வருவதாகவும், இதிலுள்ள ஒரே குறைபாடு, தெளித்த பிறகு ஆகாயத்திலிருந்து அக்கரைசல் பூமியை நோக்கி வேகமாகக் கீழே வந்துவிடுகிறது என்பதுதான். அதனை ஆகாயத்திலேயே நிரந்தரமாகப் பந்தலிட முடியவில்லை என்கிறார் ரஷிய விஞ்ஞானி யூ இஸ்ரேல். பூமியின் வெப்பநிலையை மாற்றுவதற்கு ஜப்பானில் கூடிய 12 விஞ்ஞானிகளின் உச்சி மாநாட்டு அறிக்கை இந்நூற்றாண்டின் அய சிந்தனையாகும். அந்த அறிக்கையின்படி, காடுகளில் தொடர்ந்து வயதான மரங்களை வெட்டிவிட்டுக் கன்றுகளை நட்டு வளர்த்துக் கொண்டே வர வேண்டும். மரங்களையே வெட்டக் கூடாது என்று சூற்றுச்சூழல்வாதிகள் சொல்வதை மறுயோசனை செய்ய வேண்டியவர்களாகவே உள்ளோம். வனங்களில் வெட்டப்படுவதற்குயவை வயதான மரங்கள் என்பதையும் வளர்ப்பதற்குயவை மரக் கன்றுகள் என்பதையும் தெளிவாகப் புந்துகொள்ள வேண்டும். இரண்டாவது, மரங்களைப் போலவே, கயமில வாயுவை உள்கொண்டு வாழ்கிற கடல்பாசிகளைப் பெருக்குவதன் மூலமும் பூமி வெப்பத்தைக் குறைக்க முடியும். மூன்றாவதாக, மக்கள் வாழ்கிற நகரங்களில் கந்தக அமிலக் கரைசலை விமானத்தின் மூலம் தெளிப்பதாலும் புவி வெப்பத்தைக் குறைக்க முடியும். இந்த மூன்றும் புதிய கண்டுபிடிப்புகள். இவற்றை உலக நாடுகள் நடைமுறைப்படுத்தினால், பூமி வெப்பத்திலிருந்து விடுதலை பெற முடியுமென்று அண்மையில் கூடிய டோக்கியோ மாநாடு வலியுறுத்தியிருக்கின்றது.
பெ. சிதம்பரநாதன்
(கட்டுரையாளர்: ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசியர்).
நன்றி : தினமணி

2 comments:

said...

அருமையான தகவல்கள் பல தந்தற்கு நன்றி.
please visit my blog
pugaippezhai.blogspot.com
உலக வெப்பமேறல் - உலக வெம்மை - உலக வெப்பம் கூடுதல் - Global Warming"

said...

கோவை விஜய் வருகைக்கு நன்றி

உங்கள் பதிவு அருமை