Wednesday, August 27, 2008

போராடும் பேனா போராளிகள்!

""எழுத்தாளர்கள், பத்திகையாளர்கள் தெற்காசிய நாடுகளில் தீவிரவாதிகளைப் போல் கருதப்படுகிறார்கள். ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்களின் குறைகளை எழுதுவதால், பேனா போராளிகள் மீது அடக்குமுறை, நெருக்கடி, அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கின்றன'', என்கிற கருத்து புலனாய்வுப் பத்திகையாளர்களிடம் நிலவுகிறது. சுதந்திரமாக செயல்படும் பத்திகையாளர்கள் இதனால் பெய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை குறித்து அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய ஊடகவியலாளர் மாநாட்டில் கவலை தெவிக்கப்பட்டது. இந்தியாவின் மூத்த பத்திகையாளர்கள் கே.கே. கட்யால், நிகில் சிங், வினோத் சர்மா, பாகிஸ்தான் மூத்த பத்திகையாளர் இம்தியாஸ் ஆலம், இலங்கை முன்னணி பத்திகையாளர்கள் அமீன், லட்சுமண் குணசேகர, சர்மிணி எனப் பலர் பங்கேற்றனர். தெற்காசிய நாடுகளில், குறிப்பாக நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் பத்திகையாளர்கள் மத்தளம் போல் ஆட்சியாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினன் நெருக்குதல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) உச்சி மாநாட்டுக்கு முன்னதாக நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு தெற்காசிய சுதந்திர ஊடகவியலாளர் சங்கம் (சாஃப்மா), தெற்காசிய ஊடக ஆணையம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. "பத்திகையாளர்களின் பாதுகாப்பு' என்பதே மாநாட்டின் மையக் கருத்து. சுதந்திரமாக கருத்துகளைச் சேகத்தல், எழுதுதல், தகவல் அறியும் உமை, பத்திகையாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் குழு அமர்வுகளில் விவாக விவாதிக்கப்பட்டது. கொந்தளிக்கும் சூழல்களில் பத்திகையாளர்கள் செய்தி சேகத்து வெளியிடுவதில் உள்ள இடர்ப்பாடுகள், அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெவிக்கப்பட்டது. தகவல் அறியும் உமை தெற்காசிய நாடுகளில் எந்த அளவில் உள்ளது என்பதை விவாக அந்தந்த நாட்டுப் பத்திகையாளர்கள் விளக்கினர். ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் இது குறித்த சட்டமே இல்லை. வங்க தேசம், பூடான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் தகவல் அறியும் உமை குறித்து திட்டம் உள்ளது; ஆனால், சட்டம் உருவாகவில்லை. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இச்சட்டம் உருவாகியுள்ளது. எனினும், இன்னும் தீவிரமாகச் செயலுக்கு வரவேண்டும் என்று கருத்து தெவிக்கப்பட்டது. மாநாட்டில் நேபாளத்தில் பத்திகையாளர்களின் நிலைமை குறித்த ஆய்வுக் கட்டுரை வழங்க வந்த கிஷோர் ஷ்ரேஸ்தா கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. ""இது இந்த மாநாட்டுக்கு வருவதற்கு இரு தினங்களுக்கு முன் கிடைத்த பசு'' என்று வேதனையுடன் காட்டினார். பத்திகையாளர்கள் மீதான தாக்குதல், காட்டுமிராண்டித்தனமாக இருப்பதை அவர் உருக்கமாக விவத்தார். நேபாளத்தில் மன்னராட்சிக் காலத்திலும் இப்போதும் தாக்குதல் தொடர்கிறது என்றும், மாவோ தீவிரவாதிகளும் இதற்கு விதி விலக்கல்ல என்றும் தெவித்தார் அவர். சில அரசியல் கட்டுரைகளை வெளியிட்டதற்காக நேபாளத்தின் பெய தேசிய நாளேடுகள் நிறுத்தப்பட்டன. பிரேந்திர ஷா என்ற பத்திகையாளர் கடத்தப்பட்டு, சில தினங்களில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்; பிரகாஷ் சிங் தாக்கு என்ற பத்திகையாளன் கதி தெயவில்லை என்றார் அவர். கடந்த ஆண்டு பத்திகையாளர்களுக்கு எதிராக 575 சம்பவங்கள் நடைபெற்றன. ""எத்தனை அடக்குமுறைகள் இருந்தாலும் நேபாளத்தில் பத்திகைகள் எதிர்கொள்ளும்'' என்றார் கிஷோர் ஷ்ரேஸ்தா. இலங்கையில் தமிழ்ப் பத்திகையாளர்கள் மட்டுமின்றி, சிங்கள முற்போக்கு பத்திகையாளர்களும் நெருக்குதலுக்கு ஆளாவதை சிங்களப் பத்திகையாளர்கள் சுட்டிக் காட்டினர். ""ஒரு புறம் தமிழ்ப் பத்திகையாளர்களைச் சந்தேகக் கண்ணுடன் இலங்கை அரசு பார்க்கிறது. மறுபுறம், விடுதலைப் புலிகளும் அவ்வப்போது நெருக்கி வருகிறார்கள்'' என்றார் ஒரு பத்திகையாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு பத்திகையாளர் தொழில் தொடர்பாக டென்மார்க் சென்று திரும்பினார். இதை வைத்து, அவர் டென்மார்க்கில் புலிகளுக்கு ஆதரவாகப் பயணம் செய்து வந்தார் என்று வருணிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, திட்டவட்டமாக மறுத்தார். ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களில் மட்டும் இரு பத்திகையாளர்கள் கொல்லப்பட்டனர். இரு பெண் பத்திகையாளர்கள் தாக்குதல் காரணமாக ராஜிநாமா செய்துவிட்டனர். ஒரு கட்டுரைக்காக ஒரு பத்திகையாளருக்கு மாகாண கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. பலருக்கு அபராதம், சிறை, காவல், கெடுபிடி விசாரணை என்பது சகஜமாகிவிட்டது. கடந்த ஆண்டு 5 பேர் கொலையுண்டனர். வங்க தேசத்தில் அரசியல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கார்ட்டூனிஸ்ட் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார். இது தவிர போலீஸ் ஊழலை எழுதிய நிருபர் கைது செய்யப்பட்டிருகிறார். பொதுவாக, சார்க் நாடுகளில் ஜனநாயகம் நிலை பெற வேண்டும் என்பதில் அந்தந்த அரசுகள் மிகுந்த கவனம் எடுத்து வருகின்றன. ஆனால், எழுத்துச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் இருந்தால் மட்டும்தான் ஜனநாயகம் தழைக்க முடியும் என்பதை அந்த அரசுகள் ஏனோ உணர மறுக்கின்றன!
பா. கிருஷ்ணன்
நன்றி ;தினமணி

0 comments: